திங்கள், 8 ஏப்ரல், 2013

எத்தனை மனிதரையா என் வாழ்வில்




முன்னாள் சிரித்து புறம் பேசும் மனிதர்கள்...
அடுத்தவனை பற்றி அக்கறை படாத சுயநல மனிதர்கள்...
நான் உண்டு என் வாழ்வுண்டு என்று வாழும் மனிதர்கள்...
என் வாழ்வே இந்த உலகத்திற்கே என்று வாழும் மனிதர்கள்...
அயல் வாழ விரும்பாத மனிதர்கள்...
நட்புக்காக ஒருசில மனிதர்கள்...
உறவுக்காக ஒருசில மனிதர்கள்...
அன்புக்காக ஒருசில மனிதர்கள்...
பணத்திற்காக ஒருசில மனிதர்கள்...
கடமைக்காக ஒருசில மனிதர்கள்...
அர்த்தமற்ற மனிதர்கள்...
அர்த்தமுள்ள மனிதர்கள்...
கட்டளை இடும் மனிதர்கள்...
காரணத்திற்கான மனிதர்கள்...
காரியத்திட்க்கான மனிதர்கள்...
ஆலோசனை எனும் பெயரில் அறுக்கும் மனிதர்கள்...
இப்படி எத்தனை மனிதரையா என் வாழ்வில் இவர்களில் நானும் ஒருவகை மனிதன்
என்ன வாழ்க்கையடா...

எல்லா மனிதரும் கடைசியில் சுடலை மனிதர்களே.

கருத்துகள் இல்லை: