நியாயமற்ற
முறையில் உறவின் சுமையைச் சுமப்பதாக ஒருவர் நினைக்கும்போது கசப்பும்,
கோபமும் வளரும். துணைகளில் ஒருவர், தன்னை அடுத்தவர் புண்படுத்துவதாக
நினைக்கும் போதும் அந்நிலை ஏற்படலாம். எந்த ஒரு உறவாக இருந்தாலும் பேச்சு
தொடர்பு என்பது மிகவும் முக்கியம். தமது துணையிடம் உணர்வை பகிர்ந்து கொள்ள
எப்படி பேச வேண்டும் என்பதை இருவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.
சனி, 23 மார்ச், 2013
வெள்ளி, 22 மார்ச், 2013
ஏன் பெண்ணாய் பிறந்தேன்
கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால்
காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன்.
பேசும் பேச்சில் தெளிவு வேண்டும்....
ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாக்கக் கூட
இருக்கலாம் .ஆனால் மனித உணர்வுகளை மதிக்கத்தக்க நேசிக்கத் தக்க பண்பு
அவனிடம் என்றும் குறையாமல் இருத்தல் வேண்டும் .இவ்வாறு சத்தியம் தவறாத
பிறருக்கு உதவும் நற் குணங்கள் நிறைந்த மனிதர்களே நாம் போற்றப்பட வேண்டிய
புனிதர்கள். .அசலும் ,நகலும் போட்டியிடும் இவ் உலகில் நாம் முதலில் உணர
வேண்டிய விடயம் இதன் உண்மைத் தன்மை ஒன்றினைத்தான் .நாம் பின் தொடரும்
பாதைகள் எதுவாக இருப்பினும் எம் பயணம் தொடர்வதற்கு முன்பே சற்றேனும்
இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும் .தெரிந்துகொள்ள வேண்டும். .செல்லும்
இடம் எதுவென அறியாமலே மந்தைகள் போல் எம் குணம் இருக்குமானால் வரும்
இன்னல்களுக்கும் நாம் இடமளித்துத்தான் ஆக வேண்டும் .
காதல் வாழ்வின் பலம்
உயிர்கள் பிடிப்போடு வாழக் காதல் மிகவும் தேவையான ஒன்று.காதல் இல்லாத
வாழ்வு பாலைவனம்போல ஈரப்பிடிப்பற்று இருக்கும் எதிலும் பற்றுதல்
இருக்காது.காதலில் பற்று உள்ள ஒருவரால் எதையும் சாதிக்க
முடியும்.நேசிப்பைக் கொஞ்சம் ஆழமாக்கினால் ஊறும் நீரே காதல்.உடலைத் தாண்டி
உள்ளத்தை நெருங்க முயல்வது காதல்.உண்மையும் உயிரும் கலந்தால் காதல்
வாழ்வின் பலம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)