செவ்வாய், 9 ஏப்ரல், 2013

என் வேதனை யாருக்கு புரியும்


என் வேதனை யாருக்கு புரியும் ...?.....
தூறல் மழை ...!
பருவமழை ...!
என்றெல்லாம்
பொழிகிறது ....!
 குழந்தைகள் கைகொட்டி மகிழ்கின்றார்கள்
காதலர்கள் தமைமறந்து நனைகின்றார்கள் ..
விலங்குகள் விளையாடுகின்றன ...!
யாருக்கு தெரியும் ..? -
என் வேதனை ..?
முகில் என்ற பெரும் உடம்பை ..
கொண்டிருக்கிறேனே தவிர ...?
மழைத்துளி எனும் சிறு குழந்தை
கீழே விழும் போது  ஓடிப்பிடிக்கவோ
அவர்களுடன் ஓடி விளையாடி மகிழவோ
கால்கள் இல்லையே..?
யாரறிவார் என் வேதனையை ...?

கருத்துகள் இல்லை: