செவ்வாய், 9 ஏப்ரல், 2013

என் தனிமைக்கு ஏதோ ஒரு வெறுப்பு....


சமீபகாலமாய் என்னால்
தனிமைபடுத்தப்பட்ட‌
என் தனிமைக்கு
ஏதோ ஒரு வெறுப்பு....
என் மேல்....

நலம் விரும்பிகளையும்
நட்புகளையும்
எனக்கென இருந்த உறவுகளையும்
வெளித்தள்ளிவிட்டு.....
ஒய்யார நடை நடந்து வருகின்றது
என் அறையெங்கும்....
தினம் வரும்
நலம் விசாரிப்புகளிலிருந்து
நேசம் பரிமாறிடும் அன்பிலிருந்து....
அன்பு தாங்கி வந்த‌
அத்தனை பேரையும்
வெறுப்பை சுமந்து செல்லும் படி
செய்கிறது.....
கவிதைகளை கைக்கு
கிடைக்க செய்து விட்டு
அன்பை தள்ளி வைக்கின்றது...
கால்கள் வலிக்க நடக்கச் செய்துவிட்டு
நான்கு சுவர்களுக்கு நடுவே
கட்டி போட்டு விடுகிறது......
இப்போதெல்லாம்....
சுவர் பல்லியும்....
தேநீர் குவளையும்.....
சில புத்தகங்களும்....
சில பல கவிதைகளுமே.....
சொந்தமென்றான பின்.....
உண்மையாய் பழகி.....
உயிரினில் வைத்து
உரிமை பாராட்டுவதாய் நினைத்து
உதறித்தள்ளும் உறவுகளை விட‌
இந்த தனிமை
எனக்கு
பிடித்து தான் இருக்கின்றது

கருத்துகள் இல்லை: