ஒன்றுமே இல்லை
இவ்வுலகில் எதுவும்
நிரந்தரம் இல்லை...
நாளைய
நிகழ்வுகள் தெரியாது
நேற்றைய பொழுதுகள்
சில சமயம் புரியாது
மனம் போன போக்கில்
கால் போன திக்கில் பலர்
கண்டபடி சுற்றினாலும்
சில சம்பவங்களுக்கு அர்த்தம் கிடையாது
இது சரி.. இது தவறு...
அனைத்திற்கும் ஓர் இலக்கணம்
எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை
தடைகளை மீறி வந்தால்
தவிடு பொடியாக மனசு உடைந்தெறியும்
தகாத வார்த்தைகள்....
அரசியலும்
சட்டமும் மனிதனுக்காக
மனிதன் வகுத்ததுவே
அந்த சட்டமே பல நேரங்களில்
பகடையாய் பந்தாடுகிறது....
ஆறடி ஆனாலும்
நாலு அடி ஆனாலும்
கடைசியில் அவன் மண்ணுக்குளே
இத புரிந்து கொள்ளாத மடப்பயளுகளே
அடித்துக்கொண்டு துடித்து இறப்பார்களே
இந்த பூமியிலே
நிலை இல்லாத
இவ்வுலக வாழ்க்கையிலே
அன்றாடம் கிடைக்கும்
சந்தோசமே மிச்சம்.......
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக