- உயிரோடு
இருப்பதா?
- மகிழ்ச்சியாக
இருப்பதா?
- பணம், புகழைத் தேடி
தலை தெறிக்க ஓடுவதா?
- தோல்விகளில்
கற்றுக் கொள் வதா?
- வெற்றிகளில்
பெற்றுக் கொள் வதா?
- தன்னலமற்ற
அர்ப்பணிப்பா?
- தத்துவங்களின்
அணிவகுப்பா?
இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியா விட்டாலும், பிறந்தவர் அனை வரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியா விட்டாலும், பிறந்தவர் அனை வரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர்
அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது.
காய ப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில்
எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளி
வடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில்
தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.
இறைவனால் இவ்வுலகில்
படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி
எதுவுமில்லை. விலங்குகள் தற் கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு
முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று
கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு
மட்டும் வாழ்க்கை க்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது.
அது என்ன..? தன்னம்பிக்கை.
மனோ பலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒரு
விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை பற்றி
தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லா விட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு
மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை
அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள
வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான். கற்றுக் கொள்ளாதவன்
தவிக்கிறான்.
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட்டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட்டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து
மனிதன் பல விதத்தில் மாறுபடு கிறான். சூழ்நிலைக்கேற்ப
தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து
கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக
இருப்பதில்..! இத்தனையும் பெற்று, சிந்தித்து
செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில்
மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து
விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான்
வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.
துன்பம் துரத்தும் போது
ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும்
வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே
வாழ்க்கை என்று முடிவு செய்து, தனக்கு சோக மான
முடிவை தேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.
நம்பிக்கை எனும் வானவில்
நம்மிடம் எப்போதும் இருக்க
வேண்டும்.
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம் பிக்கை தோன்றும் போது வாழ்க்கை
அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும்
வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது.
அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
இரவும், பகலும்
வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும்
வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும்
மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை.
அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.
சூரியன்
உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை
எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக
காத் திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிக மில்லாத காலத்தில் கூட
இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொ லைகள், இப்போது தான் அதிகமாகி
வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழ வைப்பதில்லை. இந்த நவீன
யுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?
உங்களுடைய
வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க
வேண் டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை
வரவேற்க காத் திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம்
முன்வந்து
நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக
இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு
போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு
பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று
பொறுத்திருந்து பார்க்கலாமே.
இன்று பல்வேறு
சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள்
வாழ்க்கையில் நம்பிக்கை
இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பா ர்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின்
எல்லைக்கே போய் விடுகிறார்கள்.
நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற
தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும்
எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கை யுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ்
எண்ணங்கள் நம் சூழ் நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம்
எண்ணம் ஒரு நாள் செயலாகும் போது தான் அந்த எண்ணத் தின் வலிமை
புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அது வாக மாறிவிடுவோம்.
- நம்மைவிட
உடலில் பலசாலி யானை
- நம்மைவிட
வேகத்தில் சிறந்தது குதிரை
- நம்மைவிட
உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள்
நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான்
இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன்.
நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும்
சக்தி நம்மிடம் உள்ளது.
இணையத்தில்
இருந்ததை அன்புடன் இணைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக