புதன், 17 ஏப்ரல், 2013

சில பொன்மொழிகள் இவை



நீ செய்யும் காரியம் தவறாகும் போது
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.
ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----

பல முகங்களே


பொய் என்று தெரிந்தும்
சந்தர்ப்பத்தில் சத்தியம் செய்து
அகமொன்று வைத்துப்
புறமொன்று பேசி
வேசத்தில் வாழும் மனிதர்கள்
பலர் இன்று...
உள்ளத்தில் வஞ்சகம்
மறைந்திருக்கும்
முகத்திலே புன்னகை
மலர்ந்திருக்கும்
மானிடர்க்கு பல வேடங்கள்...
போலி முகங்களே இன்று பல...

அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி


அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும்இ பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.

நான் யார்????


என்னை
நல்லவள் என்று
என்னால்
நிருபவித்து காட்ட
முடியவில்லை
ஏனென்றால்!
என்னை
கெட்டவளென்று
ஏற்கனவே சிலர்
கரும்புள்ளி
குத்திவிட்டார்கள்...