நீ செய்யும் காரியம் தவறாகும் போது
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.
ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----
பொய் என்று தெரிந்தும்
சந்தர்ப்பத்தில் சத்தியம் செய்து
அகமொன்று வைத்துப்
புறமொன்று பேசி
வேசத்தில் வாழும் மனிதர்கள்
பலர் இன்று...
உள்ளத்தில் வஞ்சகம்
மறைந்திருக்கும்
முகத்திலே புன்னகை
மலர்ந்திருக்கும்
மானிடர்க்கு பல வேடங்கள்...
போலி முகங்களே இன்று பல...
அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும்இ பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.