கவி பாடும் உன் குயிலுக்கு
வாழ்க்கை இருளானது
தினம்தோறும் அழுதிங்கே
கண்ணீர் குளமானது ...........
செந்தமிழ்க் கவியானது
அடடா இது அந்த சூரியனும்
என்றும் அறியாதது
!.............
என் விதி போகும் பாதை
அது ரணமானது...........
இதை விளங்காமல் மயிகூட
தினம் மகிழ்ந்தாடுது
!............
எனைத்தொட்டால் தென்றலும்
சூடேறுது
எதற்கிந்த வாழ்க்கை என்று என் மனம்
வாடுது
கலைக்கூடம் எனைக் காக்கத் தினம்
ஏங்குது
நான் கைவிரித்தால் மெய்ணைத்து எனை
வாழ்த்து
இது என்ன போராட்டம் எம்
வாழ்விலே......!!!
வாழ்க்கை எல்லாமே மாயைதான் வேறு
ஒன்றுமில்லை..
அன்பென்ற வலைவிரித்த ஆண்டவனின்
அன்றாட விளையாட்டை யார்தான்
அறிவார்!.....
வம்புகள் செய்திடும் எம்
தலைவிதியை
வருந்தித்தான் நாம் வெல்லவேண்டும் வேறு
வழியில்லை
இதைச் சொன்னவள் நீ எங்கு
சென்றாயோ........!!!
என் சோகத்தை ஆற்றிட வர
மாட்டாயோ!.......
அன்னை உன் மடியதனைத்
தேடுகின்றேன்
ஆதரித்து எனை நீயாவது தூங்க
வைக்காயோ...
என்
இரண்டு விழியும் செய்த பாவம்
என்ன........!!!
இதயம் இங்கே தனியாய்த் தவிக்கிறதே என்
செய்வென் !...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக