கர்ணகொடுரமாய் நிகழ்ந்துவிடுகிறது
இந்நாட்களில்
இது போன்றதொரு
சம்பவம்
எவ்வளாவு மென்மையானவற்றையும்
புறந்தள்ளி விடுகின்றது..
புரிந்தவரின் புரியாத
இந்த செயல்
இந்த செயலுக்குப் பின்
ஏதோ ஒரு வலியும்
மூர்க்கத்தனமும்
மூர்ச்சையாகித்தான் கிடக்கின்றது
ஏமாற்றப்பட்டதன் வலியும்
ஏமாந்துபோனதன் கோவமும்
நீண்ட நேர நினைவுத் தேடலும்
கண்ணீரில் கொண்டு வந்து
முடிக்கின்றது
முடிந்ததாய் நினைத்திருந்த
வேளையில்
நம் பலவீனங்கள்
பழைய பிரியங்களை
கண்முன்னே
பிரித்துப் போடுகின்றது
பிரியமானவர்களின் பிரிவைவிட
பிரிந்த பின் அவர்களின்
பிரியமற்ற நினைவுகள்
தரும் வலியைவிட
கொடுமையான ஒன்று
இருந்துவிடுமா என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக