செவ்வாய், 9 ஏப்ரல், 2013

நிதர்சன உண்மை


மனம் தடுமாறும்
புத்தி பேதலிக்கும்
கடவுளும் கை கொடார்
கை கால்கள் சொரனையற்று
கண்கள் ஒழியிழந்து
பார்வை நிலை குத்தினால்
மரணம்.....!

இதுவே நாம்
நாள் தோறும் காணும்
நிதர்சன உண்மை.

இதையறிந்தும் மனிதன்
செய்யும் செயல்கள்
ஆசை, காமம், கோபம், சூழ்ச்சி
வஞ்சகம் இன்ன பிற
ஏமாற்றுதல்கள்
வாழும் வழி நெடுக - தன்
வாழ்க்கைத் தடங்களாய் ...

எதை நோக்கி உன் பயணம்
வெற்றியை நோக்கித்தான்
எனப் பதில் இருப்பின்
எது வெற்றி ...?

பணமல்ல பதவியல்ல வெற்றி
பாழும் கௌரவுமல்ல வெற்றி
மரணத்தை வென்றாலே
உண்மையான வெற்ற
வெல்வானா
எல்லாமே என்னால்தான்
என மார்தட்டும் மனிதன் ...?

மரணத்தை வென்றவராய்
மகாத்மா வரிசையில்
பலர் மற்றவர் இதயம்
நேசித்தவர்களே ....

நாம் இனி
இதயம் நேசிப்போம்
இறக்கும் முன்
நல்லன நடத்துவோம்
வாழ்க்கையை நன்னெறி படுத்துவோம்

மனதில் மனிதம் எனும்
மரம் நடுவோம்
இனி வருங்காலதிலாவது
மனிதம் வளரட்டும்
ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி
பனை போல பயன் தரட்டும்
 
வீடு வரை மனைவி ...
வீதி வரை உறவு ...
காடு வரை பிள்ளை ...
கடைசி வரை ...!
 
ஆஹாஹாஹாஹாஹ

கவிஞரே உமக்குப் புரியாததா ..?
கடைசி வரை ... நம்
பாவ புண்யமே ...!?
 

கருத்துகள் இல்லை: