சனி, 9 மார்ச், 2013

நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக

அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.

நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.

என் வாழ்நாளில்.....!

 
வாழ்க்கை என்பது சில நாள் துக்கம்
சில நாள் மகிழ்ச்சி - ஆனால்
சிலரின் வாழ்க்கையில்
சோகம் மட்டுமே - ஆனாலும்
இருட்டில் இருக்கும்
எண்ணற்றோர்க்கு - ஒருநாள் 
விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன்
நானும் - என் வாழ்நாளில்...!

எங்கு தொலைத்தோம்????


இலையுதிர் காலத்தில்
இடம்மாறிய
இதயங்கள் சில
வசந்தகால மழைத்துளிகளின்
ஈர நினைவுகளை சுமந்து
சந்தித்து கொண்டோம்....

ஏன் யோசிக்கிறாய்...

 
உயிரில்லாத மலர்களைக்கூட
நேசிக்கிறாய் ஆனால்
உனக்காக உயிரையே கொடுக்கும்
என்னை நேசிக்க
ஏன் யோசிக்கிறாய்... ♥ ♥

பாரதியார் பாடல் ஒன்று



அரைஞாண் கயிறும் உனதில்லை
ஆறடி நிலம் கூட உனதில்லை
இறுமாப்பு கொள்ளாதே
ஈ மொய்க்கும் மேனி இது
உண்மை இதை நீ உணர்ந்தால்
ஊரை வளைக்க மாட்டாய்
எதுவும் இங்கே உனதில்லை
ஏன் இந்த ஆர்ப்பாட்டம்
ஐயம் உண்டா இன்னும்
ஒரு நாள் புரியும் எல்லாம்
ஓய்ந்து விடுவாய் அன்று.......

நானும் மனிதன்..........

நல்லதை செய்தால் ஏசும் உலகம்
பொறாமை பிடித்தவர்கள்

நல்லதை சொன்னால் கேலிசெய்யும் சுற்றம்
கையாலாகாதவர்கள்

சிலரின்வார்த்தைகள்....

தேளின் கொடுக்காய் சிலரின் வார்த்தைகள்
இனிமையன விஷமாய்
சிலரின்வார்த்தைகள்....

மனிதர்கள்


அன்பை முடக்கி தினமும்
அகந்தையை பெருக்கி
தன் வலிமை கொண்டு
பிறரை வதைப்பவன் அரக்கன்!...

அறிந்தும் அறியாதவனாய்
உறங்குவதுபோல் நடித்து
தன்னையும் பிறரையும்
ஏமாற்றிப் பிழைப்பவனே அறிவிலி!...

அகதி வாழ்வில் அர்த்தம் உண்டா?


ஊர்ந்து திரியும் நத்தைக்கும்
உரிமை உண்டு இன் நாட்டினிலே
உழைத்து வாழும் எங்களுக்கோ
உள்ளம் முழுவதும் வலியிருக்கு!...

யுத்தம் இல்லாமல் ஒரு பூமி


அழைத்தாலும் செல்ல மாட்டார்
அழைப்பு ஏதும் விடவும் மாட்டார்
யுத்தம் இல்லாமல் ஒரு பூமி பல
யுகங்கள் கடந்தும் வாழுது பார் சாமி!!!....