வெள்ளி, 22 மார்ச், 2013

ஏன் இப்படி பெண்களை பயன்படுத்துகின்றார்கள்.????


எத்தனையோ மாதர் சங்கங்கள்
மகளிர் மன்றங்கள்
தணிக்கை குழுக்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ
இருந்தும் என்ன பயன்?
மாந்தர்களின் மானம் காற்றில்
பறந்துக் கொண்டே தானே இருக்கின்றது?
படித்தவர்களிலிருந்து பாமரர்கள் வரை
பெண்களை போகப்பொருளாகத்தான்
பார்க்கின்றார்கள்.

வில்லியாகத்தான் விமர்சிக்கின்றார்கள்.
பணத்தாசை பிடித்தவர்களாக
படைப்பு கொடுக்கின்றார்கள்.
இதை சில பல நேரங்களில் பெண்களே
செய்யும் போதுதான்
சிதைந்து சிணுங்குகின்றது நெஞ்சம்.

கட்டில் முதல் தொட்டில் வரை
ஊர்தொட்டு உலகம்வரை
ஒவ்வொன்றிலும் ஊன்றுகோலாய்
இருப்பவர்களை-
ஒட்டு துணியுடன் ஆட விடும்
பெரிய திரை;

ஆதிக்கம் செய்பவர்களாக,
அடுத்தவர்கள் [கணவர்கள்] பொருள்களுக்கு
ஆசைபடுபவர்களாக,
ஊறுவிளைவிப்பவர்களாக
சித்தரிக்கும் சின்னத்திரை;

சோப்பிலிருந்து சீப்புவரை
அனைத்திலும் அரைகுறை
அங்கங்களுடன் பெண்கள் - என
அலையவிட்டுக்கொண்டிருக்கும்
ஊடகங்கள்
இப்படி எல்லா வட்டாரத்திலும்
துரத்தி துரத்தி துவேசம்
செய்யப்படுகின்றார்கள் பெண்கள்.
 ஏன்?
இதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா---இல்லை
மேலை நாட்டு மோகம் இங்கே மேம்பட்டுவிட்டதாலாவா?
எதை சொன்னாலும் அது அந்தகாலம் - என
பழையவைகளை பரணியில் போட்டதாலா?
மனித மனங்கள் மதிப்பிழந்து
காகிதப் பணத்தின் பதவி உயர்ந்ததாலா-இல்லை
கடவுளின் பயம் விட்டுப்போனதாலா?

எதுவானாலும் இன்றைய உலகம்
எந்திரமாக்கப்பட்டுவிட்டது.
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.
தன்னைக் காத்துக்கொள்வதோடு-
தன்னைச் சார்ந்தவர்களையும் காக்க முயற்சிப்போமாக......................


ஒரு மனிதன் தானாக தன் தவறுகளை
திருத்திக் கொள்ளாதவரை
எந்த தவறுகளும் திருந்தப்படுவதும் இல்லை
நிறுத்தப்படுவதும் இல்லை.





கருத்துகள் இல்லை: