
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு பாவமாவது அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம். நாம் வாழும் காலம் மிக மிக சொற்பமானதே அந்தக் குறுகிய காலத்தில் எம்மால் முடிந்த சிறு உதவியாவது செய்தால் ஒரு மனத் திருப்தியிருக்குமல்லவா?
இது ஒரு சுயலாபமற்ற திட்டம் சம்பந்தமானது . நாம்
இணையத்தில் செலவழிக்கும் பல்லாயிரக் கணக்கான மணித்துளியில் ஒரு சிறு பகுதியை இதற்காக செலவிட்டால் என்ன ? பெரிதாக ஒன்றுமில்லை உறவுகளே. நீங்கள் அனைவரும் வன்னிப் போர் பற்றியும் அதன் கொடுரமான மனித அவலங்கள் பற்றியும் தாராளமாக அறிந்திருப்பீர்கள். அதன் வடுக்களாக இன்று பல அங்கவீனர்கள் எஞ்சி நிற்கிறார்கள். சில புலம் பெயர் அமைப்புக்கள் சுயலாபத்தை நோக்காகக் கொண்டு அவர்களை காரணம் காட்டி பணம் சம்பாதிக்கிறது. அதுமட்டுமல்ல போர் வெறி கொண்ட மக்களை உசிப்பேத்தி தம் பிழைப்பை ஓட்டுகிறார்கள்.உங்களில் பலருக்கு அவர்கள் மீதான அதீத உணர்வின் பலனாக உதவி செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அந்த பணம் போய் சேரும் இடத்தை உறுதிப்படுத்தத் தெரியாததால் பலர் தயங்கி நிற்பீர்கள்.
திட்டம் இது தான்.
வன்னியில் பாதிக்கப்பட் இயங்க முடியாமல் இருப்பவர்களை அடையாளம் காண வேண்டும் அது சிரமமல்ல பலர் இருக்கிறார்கள். அவர்களது வாழ்வாதார நிலமை. அவர்களுக்கான பிரச்சனை என்பவற்றை அறிய வேண்டும்இ அவற்றை அவர்களது படம். தொடர்பாடல் முகவரியுடன் வெளிக் கொணர வேண்டும். அதன் பின் ஆர்வமுள்ளவர்கள் அவர்களுடன் நேரடியாகத் (தொலைபேசி அல்லது இங்குள்ள உங்களது உறவினராககவும் இருக்கலாம்) தொடர்பு கொண்டு அவர்களுக்கு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி ஏனும் செய்யலாம் காரணம் ஆற்றில் தத்தளிப்பபவனுக்கு ஓரு சிறிய மரத் துண்டு கூட பெரிய உதவி தானே.
உண்மையில் மனமுன்டானால் இடமுண்டு காரணம் ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிக்கும் ஒருவருக்கு ஒன்றை இழப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அது போல் வாரத்தில் இதற்காக ஒரு நேர உணவை துறந்தால் கூட தப்பில்லை காரணம் வாரம் முழுதும் பட்டினியாய் கிடக்கும் ஒரு குடும்பத்திற்கு நாம் இதைக் கூட செய்யாமல் விடலாமா ?
இப்போது கூட பலர் போருக் கென்று சொல்லி பல சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். முதலில் எது முக்கியம் என யாராவது சிந்திக்கிறார்களா ? இவர்கள் எல்லாம் என்ன பட்டினி கிடந்து செத்த பின்னர் உங்களுக்கு தனி நாடு கிடைத்து உலக அரங்கின் சுடுகாட்டு மையமாக மாற்றப் போகறீர்களா ?
இன்றைய கால கட்டத்தில். பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி யாராவது சிந்திக்கிறார்களா? இல்லைத் தானே. பாதிக்கப்பட்ட மக்கள் பெயரால் வாரிச் சுருட்டித் தமது சந்ததிக்குச் சொத்துச் சேர்ப்பதில் தான் ஒரு சில தீய சக்திகள் குறியாக இருக்கின்றன.
மக்கள் வாழ்க்கையினை மேம்படுத்துவதை விடுத்து. இப்போது மக்கள் வாழ்க்கை பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் இல்லை. போர்க் குற்றம் தான் அவசியம் எனப் புதுப் பாடம் கற்பிக்கின்றார்கள் ஒரு கூட்டத்தினர். தங்களிடம் வேண்டப்படுவது
இது ஒரு சிறிய சமூக சேவையாகும் இதற்கு அரசியல் ரீதியாக எந்தவித அழுத்தமும் இருக்காது காரணம் இது தனிப்பட்ட மனிதரின் நடவடிக்கையாகும். அதே போல் இங்கு முதலில் அவர்களின் தொலை பேசி இலக்கம் வழங்கப்படமாட்டாது காரணம் தவறான பயன்பாட்டுக்கு ஆளாக்கலாம் அதனால் உதவ முன்வருவோருக்கு மட்டுமே அழிக்கப்படும். நீங்கள் முடிந்ததை செய்யலாம் எவ்வளவு செய்கின்றோம் என எமக்கு தெரியத்தரத் தேவையில்லை ஆனால் கட்டாயமான விடயம் என்ன வென்றால் யாருக்குச் செய்கின்றோம் என்பதை அறியத் தரவும் காரணம் உதவிகள் எல்லோருக்கும் சமனாகக்கிடைக்க வேண்டும்.
இது சம்பந்தமான தங்களின் கருத்தைப் பெறவே இந்தப் பதிவு மிக முக்கியமாக இது நான் தங்களிடம் கேட்கும் ஆலோசனை மட்டும் தான் தங்களால் முடிந்த சிறு உதவியாக இந்த தகவலை புலம் பெயர்ந்துள் எம் சொந்தங்கள் அனைத்திற்கும் பகிர உதவுங்கள். உங்கள் ருவிட்டர் முகப்புபுத்தகம் (பேஸ்புக்) போன்றவற்றில் பகிர்ந்து இத்தகவல் பலரை சேர உதவி செய்யலாம்.
vanaki516@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக