வெள்ளி, 22 மார்ச், 2013

தலை குனியுங்கள் பெண்டிரே!


தலை குனியுங்கள் பெண்டிரே!
 படித்தவளாம்! ஆசிரியையாம்!
 எதை படித்தாள் ?
 எதை பயிற்றுவிக்க ?
வெறி தணிக்க
தேவை ஒரு பிஞ்சு குழந்தை 
பென்சிலை வைத்தும்
பேனாவை கொண்டும் 
ச்சே நினைக்க அருவருப்பான ஒன்றை
நிகழ்த்தி ரசித்த அரக்கிகளே...
உன் வயிற்றிலும் ஏதும் பிறந்ததா?
நன்றாக இருக்கிறதா ?
இல்லை உன் வெறிக்கு பலியாகி 
மூலையில் கூனி குறுகி கிடக்கிறதா?
உன் வீட்டு ஆண்
உன்னை அடக்க? மாட்டாமல்
 அடங்கி கிடக்கிறானா ?

 செத்த உடலுடன்
 உறவுகொண்டான் சிங்களவன்...
 அவனுக்கு எந்த விதத்திலும்
 குறைந்தவளில்லையடி  நீ !
 
வரிந்து கட்டிக்கொண்டு 
பொங்கும் பெண்ணுரிமை வாதிகளே 
எங்கே போனீர்கள்?
இளம் தளிரை சிதைத்த கொடூரம் 
கண்டு கொதிக்கவில்லையா மனம்
கொடி ஏந்தி போராடிக்
கிழித்தெறிய வேண்டாமா
இவர்களின் முகமூடியை...                                          

                                            எங்கே எம் சகோதரர்கள்
                                            வெட்டி வீசுங்கள் உருண்டோடட்டும்
                                            நரகறிக்கு அலையும் அரக்கிகள் தலை
                                            நிமிரட்டும் தாய்மார்களின் குனிந்த தலை!!

                                            மாபாதகம் புரிந்தவர்களுக்கு
                                            பரிந்து கொண்டு வரும்
                                            நாக்குகளை அறுத்தெறிய
                                            வேண்டும் ஒரு கூர்வாள்...

மாற்றவேண்டுமோ
ஒரு சட்டத்தை...
ஸ்கேனில் எந்த குழந்தை
 தெரிந்து கொள்ள தடை இல்லை என...!?
                                           

 பெண் குழந்தை பிறந்து பிஞ்சில்
 பாதகர் கையில் வதைபடுவதா?
 கருவில் மாள்வதா ?
 எது உத்தமம் !!?

கருத்துகள் இல்லை: