உற்றவர்களும் பெற்றவர்களும்
உயிரோடு இருந்தும் அரவணைக்க யாருமின்றி
உதறிவிட்ட நிலையில் உறவின்றி
உருக்குலைந்த என்னை
அநாதை என்று அனைவரும் அழைக்க
அடங்கியே போனது என் துடிப்பு
அதிஸ்ரம் அற்றவள் என்று
அயலவர்கள் அழைக்க
அழுதே போனது என் பொழுது
அவலை வாழ்வை மறந்து
அன்னை மடி தேடினேன்
அன்னை தந்தை இருந்தும்
அன்னை மடியில்லா அநாதையானேன்
இதயம் பூஜிக்கும் காதலின்
வேள்வியில் நான் பிறந்தேனா?இல்லை
காதல் எனும் பெயரில்
காமத்தை நேசித்ததால்
இன்றியமையா துன்பத்தில் நான் பிறந்தேனா ?
பாசத்தாய் நீ என்றால் உன் தாய்மையை உணர்த்திய
பாவியிவள்தான் என்றால்
பாரினிலே பல காலம் நீ வாழும் போது
பரிதவித்த இந்த அவலையின் அழுகுரல்
பாசத்தாய்க்கு கேட்கவில்லையா? புரியவில்லையா?
தாகங்கள் தீர்க்க எனை தனிமையில்
நீங்கள் தவிக்க விட்டு செல்ல
நான் செய்த தவறென்ன தாய் தந்தையே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக