இலையுதிர் காலத்தில்
இடம்மாறிய
இதயங்கள் சில
வசந்தகால மழைத்துளிகளின்
ஈர நினைவுகளை சுமந்து
சந்தித்து கொண்டோம்....
கவலைகள் மறந்தது
எங்கோ ஒளிந்திருந்த
குறும்புகள் மீண்டும் சிறகு விரிக்க
வாய் வலித்தது புன்னைகையால்
மீண்டும் பல வருடம் கழித்து....
இன்று
பேசினோம்
பல வார்த்தைகளும் அதில்
கலந்திருக்கும் வலிகளுக்கும்
இங்கேதான் மருந்து கிடைக்கும் ஆதலால்
எங்கு தொலைத்தோம்
ஏன் தொலைத்தோம்
சில சந்தோஷ நிமிடங்களை....
இன்றிரவு என் தலையணை நனைக்கும்.....
கண்ணீர் சொல்லும்....
என் நண்பருடன் கதைத்த வார்த்தையும்
கடந்த கால வாழ்க்கையும்....
சிரிப்பேன்
ரசிப்பேன்
ஏங்குவேன்
மீண்டும் கிடைக்காதா அந்த வாழ்க்கை.....????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக