சனி, 9 மார்ச், 2013

அகதி வாழ்வில் அர்த்தம் உண்டா?


ஊர்ந்து திரியும் நத்தைக்கும்
உரிமை உண்டு இன் நாட்டினிலே
உழைத்து வாழும் எங்களுக்கோ
உள்ளம் முழுவதும் வலியிருக்கு!...


எம் பாட்டன் பாட்டி ஆண்ட பூமி
பகைவர்  கைக்குப் போயாச்சு!...
உயிர் மீட்டு  வந்த காலம் நினைத்தே
எம் உணர்வு செத்துப் போயாச்சு........

அண்டிப் பிளைக்கும் வாழ்வு இது
அறுந்து போகும் நிலைவந்தால்
ஒரு துண்டுக்காணி கூட இல்லை
நம் நாட்டில் துவண்டு அங்கே படுப்பதற்கு!!...


கொட்டும் பனியில்  உழைத்த பணமும்
வீட்டு வாடகைக்குப் போயாச்சு இங்கு
மிச்சம் மீதி இருந்ததெல்லாம் தண்ணி
வில்லுக் கட்டித் தீர்ந்தாச்சு!!!............

அங்கும் இல்லை இங்கும் இல்லை
வாழ்க்கை  இத்துப் போன  படகாச்சு !.........
அட இந்தக் கதையைக்  கேட்ட பின்னும்
வரவு இங்கு எக்கச்சக்கம் ஆயாச்சு!!...

உழைக்கும் நாட்டில் குடிபுகுந்தால்
பணம் எட்டுப்பட்டி தேறும் என்று
இருந்த தொழிலை இழந்து வந்தவர்தான்
இன்னும் கீழே போயாச்சு !!!...................

அகதி என்று வாழும் வாழ்வில் இனியும்
அர்த்தம் உண்டா எங்கே சொல் .........
உன் நின்மதியான வாழ்வு அதற்க்கு
உன் சொந்த நாடேதான் தெரிந்துகொள்!...

கருத்துகள் இல்லை: