அன்பை முடக்கி தினமும்
அகந்தையை பெருக்கி
தன் வலிமை கொண்டு
பிறரை வதைப்பவன் அரக்கன்!...
அறிந்தும் அறியாதவனாய்
உறங்குவதுபோல் நடித்து
தன்னையும் பிறரையும்
ஏமாற்றிப் பிழைப்பவனே அறிவிலி!...
சொல் ஒன்றும்
செயல் வேறொன்றுமாய்
கண்கட்டி வித்தை புரிபவனே
அறிவறிந்த சாத்தான் !!.......
தன்நலன் கொண்டு
அறிவுரை யாப்பவன்
கண் இருந்தும் அறத்தைக்
கற்க மறந்த கோழை!....
புகழ் விரும்பி என்றும்
புறஞ் சொல்லித் திரியும்
அகத் தூய்மை அற்றவனே
அகிலமே வெறுக்கும் வஞ்சகன் !.....
அற்ப சுகத்திற்கு அடிமையாகி
நட்பைக்கூட துச்சமாய் மதித்து
காட்டிக் கொடுத்து -தன் வயிறு
வளர்பவன் எவனோ அவனே துரோகி!!...
இருந்தும் இல்லாதவன்போல்
தர்மம் செய்யப் பின்வாங்கும்
பணம் மேல் பணம் படைத்தவனே
பாரினில் தலை சிறந்த கஞ்சன்!....
மத வெறி
இன வெறி
கொண்டாடும் மனிதனே
பித்தருள் பெரும் பித்தன் !!!!......
(என்றுமே தெளியாத பைத்தியம் !...)
மென்மை என்பதன் பொருள் அறியாத
வன்மையினால் அறிவிழந்து செயல்ப்படும்
ஒரு வகை மனித மிருகமே
யாரும் அடக்க முடியாத முறடன்!!!.....
சத்தியத்தை மதிக்காமல் அதை
சாக்கடையில் போட்டுவிட்டு
சுத்தமான மனிதனைப்போல் பிறரை
சூழ்ச்சி செய்து அழிப்பவனே கொலைகாரன்!...
சிற்றின்பம் தலைக்கேற
பெற்றவளையும் தாசி என்றே
பட்டம் சூட்டி மகிழ்பவன் எவனோ
அவனே மனித நேயம் அற்ற சண்டாளன்!...
இரத்தத்தில் குளித்து
இரவுபகல் தேடி அலைந்து
அடுத்தவன் உயிரைக் குடிக்க அலைபவனே
இரக்கமே அற்ற கொடியவன் (இயமன் !..)
வரவு ஒன்று செலவு நூறு
வாங்கித் தின்றதை திருப்பித் தருவதாரு
கொடுக்கும் போது பணிந்து நிற்பான்
திருப்பிக் கேட்டால் எரிந்து விழுவானே ஊதாரி!!....
இங்கும் அங்கும் கதை பேசி
இருக்கும் அறிவை செலவளித்து
ஒன்றை ஒன்று பகைத்திடவே
ஓயாமல் உழைப்பானே சகுனி!....
அஞ்சாது பொய்யுரைத்து
அழிவுக்கே பாதை வகுத்து
செஞ்சோற்றுக் கடன் மறந்து
சிரச் சேதம் செய்வானே பஞ்சமா பாதகன்!....
காட்டிக் கொடுத்தே
நாட்டைக் கெடுப்பவன்
கை நீட்டிப் பிளைத்தே பிறரை
வேட்டையாடுபவன் எட்டப்பன்!...
(தொடரும் !...:) )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக