எண்ணிட முடியா சோதனைகள்
ஏக்கம் நிறைந்த வேதனைகள்....
ஏன் பிறந்தேன்
ஏன் வளர்ந்தேன் இம் மண்ணில்...
அன்புக்கு ஏங்கினேன்.....
அணைத்திடும் உறவுகளை தேடினேன்
அனைத்தும் அன்னியமாய் இன்று
அங்கலாய்க்கிறது என் மனம்...
பட்டினியால் பல காலம்
படுத்துறக்கம் சில காலம்..
பயமே வாழ்வாக
பார்த்திருந்தேன் வானமதை...
போர்க்களமாய் என் வாழ்வு
போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று
போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்
போரட்டமே வாழ்வாகி போனதிங்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக