மக்கள் மிக எளிமையான தமிழில்
அனைவருக்கும் விளங்கிட ஆக்கமிடுதலும், சுய களிப்பிற்கு வித்துவத்தனம்
காட்டும் கடும் தமிழுமாக கனணியில் தமிழ் அலையடிக்கிறது.
இசைவான மேடையென்று
இறுக்கமான சபையிலே பாடல்.
இசை ரசனை இருந்தாற்றான்
இசைக்கும் ஆலாபனையை ரசிக்கலாம்.
இறுக்கமான சபையிலே பாடல்.
இசை ரசனை இருந்தாற்றான்
இசைக்கும் ஆலாபனையை ரசிக்கலாம்.
தக்கபடி விட்டுக் கொடுப்பற்று
மக்கள் மௌனத்தில் காலிட்டு
தனக்காக மட்டும் சந்தையென்று
கணக்காய் பூக்கள் விற்கிறார்.
மக்கள் மௌனத்தில் காலிட்டு
தனக்காக மட்டும் சந்தையென்று
கணக்காய் பூக்கள் விற்கிறார்.
சிறு வயதில் சங்கீதக் கச்சேரிக்குப் போனால் ராக ஆலாபனை நேரம் வரும் போது
‘ ஆ..ஆ..வென்று சும்மா கத்துகினம் ‘ என்று நான் கூறியது நினைவிற்கு வருகிறது. இன்று ராக ஆலாபனையை மிக ரசித்து மகிழ்கிறேன்.
‘ ஆ..ஆ..வென்று சும்மா கத்துகினம் ‘ என்று நான் கூறியது நினைவிற்கு வருகிறது. இன்று ராக ஆலாபனையை மிக ரசித்து மகிழ்கிறேன்.
முகநூலில் ஆக்கங்கள் செய்திப்
பக்கத்தில் உருளும் போதே தாமாகப் பார்த்துக் கருத்து இடுவோரும்,
சுவர்களில் திணிப்பாக ஒட்டப்பட்டு, அதாவது ‘ராக்’ என்ற முறையில் இட்டு
கருத்துக் கேட்போருமாக பல ரகமான மக்கள்.
தமது ஆக்கங்களை பிறர் சுவரில்
போடுவோர் பிறர் ஆக்கங்கள் தமது சுவருக்கு வராது வடிகட்டவும் செய்கிறார்கள்.
இதன் கருத்து எம்மால் அவர்கள் சுவரில் ஆக்கம் இடமுடியாது.
வேப்பிலை அடிப்பது போல கருத்திடுவோரும், விவரமாகப் புரிந்து ரசித்துக் கருத்திடுவோருமாகப் பல விதம்.
பார்த்தாலும் பார்க்காதது போல, வாசித்தாலும் வாசிக்காதது போன்ற பாவனையாளரும் மறுபுறம்.
தமது ஆக்கங்களை ஒரு சுவரில்
போடும் போது (ஒட்டும் போது) பதிலாகச் சுவரின் சொந்தக்காரர் போடும்
இடுகைகளுக்குச் சிலர் கருத்திட மாட்டார்கள். இப்படிப் பல ரகமான அல்லது சுய
நலமான மக்களும் உள்ளனர்.
இணையத் தளத்தில் எனது
ஆக்கத்திற்கு குறைவாக கருத்து வந்தது பற்றி இணைய ஆசிரியருடன் பேசிய போது
அவர் கூறினார் ‘ போடும் ஆக்கத்தை விளங்கும் சக்தி மக்களுக்கு வேண்டுமே!
விளங்கினால் தானே கருத்துப் போடலாம்..’ என்றார். நெஞ்சம் துணுக்கென்று
இருந்தது. உண்மை தான் எல்லோருமே சர்வகலாசாலை சென்று படித்தவர்கள் அல்லவே!
குழந்தைகளோடு பழகும் போது குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரிப் பழகுபவர்கள் இங்கு அதை மறக்கிறார்கள். அது தான் ஏனென்று புரியவில்லை.
குழந்தைகளோடு பழகும் போது குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரிப் பழகுபவர்கள் இங்கு அதை மறக்கிறார்கள். அது தான் ஏனென்று புரியவில்லை.
கருத்திடும் போது அதற்குப்
பதிலிடும் நல்ல மனதாளரும், பதிலிட்டாத மனதாளரும் தாராளம். நான் என்கணவரிடம்
ஒரு தடவை கூறி ஆதங்கப்பட்டேன். கருத்திட்டேன் பதிலில்லை என்று. ‘ பலர்
இதைத் தவிர்ப்பது ஏன் வீண் வம்பு என்று தான் ‘ என்கிறார். வேறு சிலர்
வரிக்கு வரி பதிலிட்டு மேலும் கருத்திடத் தூண்டுகிறார்கள். இதிலும் பல
ரகம்.
ஒரு முனைவரின் வலை பார்த்தேன்.
தமிழ் கொட்டுகிறது அங்கு. நற்றுணை, குறும்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை
என்று வரிகள் போட்டு, வரிக்கு வரி கருத்துமிட்டு மிக அருமையாக
எழுதுகிறார். எந்த வித கர்வமுமற்ற அவர் பண்பான செயல் என்னை வியக்க
வைக்கிறது. வாசிக்கும் ஆசையும் வருகிறது. இப்படியும் ஒரு ரகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக