புதன், 24 ஏப்ரல், 2013

அமைதியாக அடங்குகிறது மனம்.


மனம் பேசத் துடித்தாலும்
இதழ்க் கதவைத் திறக்க
முடியாமல் தவிக்கும் வார்த்தைகள்
வெளிவருகின்றன கண்கள் வழி
ஒற்றை கண்ணீர் துளியாய்



கண்ணீர் துளியை விரல் நுனி
ஏந்தி மொழிபெயர்க்கையில்
சமாதி கட்டுகிறது மனஸ்தாபத்தை
அன்பை அருவியாக கொட்டி

அருவியில் மூழ்கியெழுந்தபின்
அத்துணையும் அழகாக புலப்பட
அளவிளா இன்பத்தை அனுபவித்து
அமைதியாக அடங்குகிறது மனம்.

கருத்துகள் இல்லை: