புதன், 24 ஏப்ரல், 2013

வாழ்வு எத்தனை நாள்?

 
இலையுதிர்த்து நின்ற மரத்தடியில் இருந்த
         நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்
தலை நிமிர்த்திச் சிரித்தது மரத்தைப்  பார்த்து
          ”விரித்த குடையுடன் நான் நிற்க,மொட்டையாய் நீ” என்று!

மரம் பேசவில்லை;மௌனமாய் அழுதது
          காளானும் கேலி பேசும் தன் நிலைக்காக.
மறவாதே!மீண்டும் துளிர்க்கும் அந்த மரம்
           காளானின் வாழ்வு  எத்தனை நாள்?
 

கருத்துகள் இல்லை: