புதன், 3 ஏப்ரல், 2013

மரணக்குரல்...!



பசி... பசி... பசி...
ஓர் உயிரின் அபயக்குரல்...!
உடல் மயிரெல்லாம்
ஒன்று சேர்ந்து சிலிர்த்து
விழிவழியே உப்புநீரை
வரவழைக்கும் மரணக்குரல்...!

ஏனோ வயிற்றில் உருதெரியா
ஓர் வலி...
உயிர்கொல்லும் வலி...
உருவம் காணா உடல்
அதில் ஒட்டிய வயிறு...
மெல்லிய கால்கள்
விரல் தொலைத்த கைகள்
ஒளி மங்கிய கண்கள்...
இதுதான் எங்கள் தேசம்
கண்ணீர்.. உமிழ்நீர்...குடிநீர்...
பேதம் அறியா தேசம்
பட்டினி தேசம்...!

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி...
நீங்கள் எந்த தேசத்தையும்
அழிக்க வேண்டாம்...
எங்கள் தேசத்திற்கு உணவு
அளியுங்கள்...
பட்டினியை அழித்து...
நாங்களும் வாழ்ந்திட
மனிதர்களாக...!

கருத்துகள் இல்லை: