செவ்வாய், 12 மார்ச், 2013

சாதி செய்தது சதியா? சதி செய்தது சாதியா?

என் சாதி
உன் சாதி
எந்த சாதி
நல்ல சாதி...? என
நாகரிகம் இல்லா
நயவஞ்சகர்கள்
நாணமில்லாமல் கேட்க
நாமெல்லாம் மனித சாதியடாஇ என
நறுக்கென்று சொல்ல
நம்மில் பலருக்கு நடுக்கமே....

சாதி வெறி
தீ பொறி
அதன் குறி
மனித நெறி
குணம் மாறி
சிந்தனை சிதறிஇ நாம் ஆவோமே அதன் பசிக்கு
கறி....

குலத்தொழிலை கொண்டு
குறிப்பிட்டு
குறிக்கப்பட்டுஇ
குறையில்லாமல் நம்முள்
குடியேறிய சாதி இபல
குலத்தை நாசம் செய்துஇ இப்போது
குஷியாக
கும்மாளமாக....

பல பல பெயர்களை கொண்டு
பல் இழித்துஇ எமனின்
பாசக்கயிரோடு நிற்கும் சாதியை
பார்க்க பார்க்க நெஞ்சம் பதைக்கிறது
பாரினில் ஏன் இந்த அவல நிலைஇ? என
கொதிக்கிறது...

சாதியை சாதாரண
சாம்பிராணி என நினைத்து விட முடியுமா ??
சிறிது நேரத்தில் தான் அகன்று விடுமா ?
சைத்தான் அது
வானத்திற்கும் பூமிக்குமாய்
வளையாமல்இ
வாடாமல்இ படர்ந்துஇ
வளர்ந்து நிற்கும்
வாலிப திமிர்...

அறுபதை தொட போகும்
அனுபவமிக்கவர்களும்
நாற்பதை தொட்ட
நல்லவர்களும்
முப்பதை தொட போகும் நாமும்
வருத்தப்பட்டு
வாதாடிஇ வாதாடி
வாடிஇ
வார்த்தைகளால்
வாய்க்கரிசி போட்டு
வாள் கொண்டு வீசி
வாழவிடாமல்
வெட்டி வீழ்த்தினாலும்
வீறு கொண்டு எழுகிறது
சிதறிய துளிகளில் இருந்து...

எழுத்தில் இருக்கும் வேகமும்
சொல்லில் இருக்கும் கோபமும்
சிந்தனையில் இருக்கும் தாகமும்
மனதில் இருக்கும் ஏக்கமும்
செயலில் இருந்தலேயன்றி
மாறப்போவதில்லை
மடியபோவதில்லை.....

சாதி செய்தது சதியா?
சதி செய்தது சாதியா?
எது என்ன செய்தாலும்
ஒவ்வொரு மனிதனின் மனமும்
சாதிக்கு எதிராய்
எண்ணகொடி பிடித்து
மாறினால் மட்டுமே
மாற்றம் கொண்டு வர முடியும்....

இல்லையேல் நாம்
வாழும் வரை நம்மோடு
வசதியாக
வாழ்ந்துகொண்டிருக்கும்.....

கருத்துகள் இல்லை: